Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM
கோவை சின்னவேடம்பட்டியில் நேற்று நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகளை வாசித்து கரோனா நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தினர். இதுகுறித்து இசைக்கலைஞர்கள் கூறும்போது, ‘‘கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால் வருவாய் இன்றி தவிக்கிறோம். மக்களைமகிழ்விக்கும் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அரசு போதிய நிவாரணம் வழங்கி வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT