Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM
கோவை செல்வபுரம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து,பணத்தை திருடமுயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் ராமமூர்த்தி சாலையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. காவலாளி இல்லாத இந்தஏடிஎம் மையத்துக்குள் நேற்று அதிகாலை 3 மணியளவில் நுழைந்தஇளைஞர், தன் கையில் இருந்தபொருளை வைத்து, ஏடிஎம் இயந்திரத்தின் முன்பகுதியை உடைத்தார். இதை ஹைதராபாத்தில் உள்ள அந்த வங்கியின் அதிகாரிகள், சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்தனர். உடனடியாக, கோவையில் உள்ள வங்கி அதிகாரிரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, ஹோப்காலேஜில் இருந்துசெல்வபுரத்தில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்று பார்த்தாா். அப்போது உள்ளே யாரும் இல்லை. இயந்திரத்தின் முன்பகுதிகதவு, பணம் வைக்கும் அறையின் கதவு, திரை ஆகியவை சேதப்படுத்தப்பட்டு இருந்தன.
செல்வபுரம் போலீஸார் வந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் செல்வ புரம் ரங்கசாமி காலனியைச் சேர்ந்தஅருணகிரி (எ) அஜய்(24) என்பதும், விமான நிலையம் சந்திப்புஅருகே பேக்கரியில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அருணகிரியை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT