Published : 21 Jun 2021 03:16 AM
Last Updated : 21 Jun 2021 03:16 AM

ராகுல்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம் :

ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி, ஜோலார்பேட்டையில் நேற்று கரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜோலார்பேட்டை

ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி ஜோலார் பேட்டையில் கரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஜோலார்பேட்டை சந்தைகோடியூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயுள்ள இந்திரா காந்தி சிலை அருகே ஜோலார்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஜோலார்பேட்டை நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்து இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி, மளிகைப்பொருட்கள் மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பை காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முருகன், கோவிந்தசாமி, மணி, மாவட்ட துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பார்த்தீபன், மாநில பொதுச்செயலாளர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x