Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM
ராஜபாளையத்தில் நேற்று 4 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம் ஊராட்சியில் உள்ள பொதுமக்க ளுக்கும், ராஜபாளையம் நகர் ஜவகர் மைதானம் டாக்ஸி ஸ்டாண்டில் உள்ள உரிமையாளர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும், ராஜபாளையம் வார்டு 25-ல் சங்கரபாண்டியபுரம் நடராஜா நடுநிலைப் பள்ளியில் பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம் முகாம்களை எம்.எல்.ஏ. தங்கப் பாண்டியன் தொடங்கிவைத்தார்.
அவர் கூறுகையில், தமிழகத்துக்கு அதிகமான தடுப்பூசிகளை பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளார். அதனால்தான், தற்போது தடுப்பூசி வந்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT