Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM

புதுக்கோட்டை, விராலிமலை தொகுதி எம்எல்ஏ அலுவலகங்கள் திறப்பு :

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை நேற்று திறந்து வைக்கும் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன். உடன் எம்எல்ஏ வை.முத்துராஜா உள்ளிட்டோர்.

புதுக்கோட்டை: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்ததையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர் வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களும் புதுப்பித்து, வண்ணம் தீட்டப்பட்டது.

இந்நிலையில், புதுக்கோட்டை எம்எல்ஏ அலுவலகத்தை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வை.முத்துராஜா (புதுக்கோட்டை), எம்.சின்னதுரை( கந்தர்வக்கோட்டை), திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், நகரச் செயலாளர் நைனாமுகமது, நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று, விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x