Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்கவும், மீன் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் நாளையுடன் நிறைவடைய உள்ளதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்கு மீனவர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மின் விளக்குகளை பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மீன்வளத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைய உள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கும், பிடித்து வரப்படும் மீன்களை மொத்தமாக ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். மீன்பிடிக்க வரும் மீனவர்கள், விற்பனை செய்ய வரும் மீனவர்களை ஆய்வு செய்து அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே மீன்பிடிக்கவும், விற்பனையில் ஈடுபடவும் அனுமதிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT