Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

வந்தவாசியில் எஸ்டிபிஐ நூதன ஆர்ப்பாட்டம் :

திருவண்ணாமலை: பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, எஸ்டிபிஐ சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நேற்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வந்தவாசி காமராஜர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஏஜாஸ் தலைமை வகித்தார். பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, பாடையில் காஸ் சிலிண்டரை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். இதில், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x