Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் அனைத்து அணைகள், குளங்கள் நிரம்பியுள்ளன. பேச்சிப்பாறை அணையில் 43.02 அடி தண்ணீர் உள்ளது. 407 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் 71.82 அடி தண்ணீர் உள்ளது. 1,816 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறைக்கு 430 கனஅடியும், பெருஞ்சாணிக்கு 545 கனஅடியும் தண்ணீர் வருகிறது. சிற்றாறு ஒன்று அணைக்கு 79 கனஅடி வருகிறது. நீர்மட்டம் 16.76 அடியாக உள்ளது. சிற்றாறு இரண்டு அணைக்கு 116 கனஅடிதண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 16.86 அடியாக உள்ளது. முக்கடல் அணையின் முழு கொள்ளளவான 25 அடிக்கு தண்ணீர் உள்ளது. 10 கனஅடி தண்ணீர் வருகிறது. 7.42 கனஅடி தண்ணீர் ெளியேற்றப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT