Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

பதவி எங்களுக்கு முக்கியமல்ல - பாஜக விட்டுக்கொடுத்து அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு: நமச்சிவாயம் : துணைமுதல்வர் பதவி தொடர்பாக தேசிய தலைமை முடிவு செய்யும் என தகவல்

பதவி எங்களுக்கு முக்கியமல்ல. பாஜக விட்டுக்கொடுத்து அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். துணைமுதல்வர் பதவி தொடர்பாக தேசிய தலைமை விரைவில் முடிவு எடுக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்று ஆட்சியமைத்து முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். ஆனால் இரு கட்சித் தரப்பிலும் அமைச்சரவையை முடிவு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தன. தொடர்ந்து இழுபறி நீடித்தது.

இந்நிலையில் புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை தலைவர் நமச்சிவாயம், மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் கட்சி அலுவலகத்தில் நேற்று கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா காலத்தில் பாஜகவினர் அதிகளவு மக்கள் பணியாற்றி தொற்றினால் பாதிக்கப்பட்டனர். தற்போது எம்எல்ஏ அசோக்பாபுவும் பாதிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி புதுச்சேரி வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஓரணியில் இருந்து புதுச்சேரி வளர்ச்சிக்காக பாடுபட தயாராக இருக்கிறோம். எங்கள் கூட்டணியில் சுமூக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. அதற்கான அறிவிப்புகளை முதல்வர் அறிவிப்பார் என்றனர்.

கேள்வி: அமைச்சரவையில் பாஜக எத்தனை இடம் பெறுகிறது?

பதில்: அமைச்சரவையில் எவ்வளவு இடம் என்பது முக்கியமல்ல. எங்களுக்கு பதவி முக்கியமல்ல அது இரண்டாம்பட்சம் தான். புதுச் சேரி வளர்ச்சிக்காக பாஜக விட்டுக்கொடுத்து, அனைத்து வகையிலும்முதல்வரோடு அமர்ந்து பேசிஅனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

கேள்வி: பாஜக எதை விட்டுத் கொடுத்துள்ளது?

பதில்: கூட்டணி இருந் தால் விட்டுக்கொடுத்து செயல்படுவதுதான் தர்மம். பாஜக - என்ஆர்காங்கிரஸ் இருவரும் ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து அனைத்து வகையிலும் செயல் பட்டு மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவோம்.

கேள்வி: உங்களின் முக்கிய கோரிக்கையான துணை முதல்வர் பதவி தரப்பட்டுள்ளதா?

பதில்: துணை முதல்வர் பதவி தொடர்பாக தேசிய தலைமை முடிவு எடுத்து, முதல்வர் அறிவிப் பார்.

கேள்வி: புதுச்சேரியில் கரோனா நிவாரணம் தாமதமாகிறதே?

பதில்: கரோனா நிவாரணம் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நிதி மேலாண்மை, அரசாணை பிறப்பித்தல், ஒப்புதல் என பல விஷயங்கள் உள்ளன. இதை நிர்வாக தாமதம் என சொல்ல முடியாது. தற்போது பேரிடர் பிரச்சினை நிலவுகிறது. வேறு ஒன்றில் இருந்து நிதி எடுத்து ஒதுக்கீடு செய்து தர வேண்டியுள்ளது.

கேள்வி: தேர்தலில் வென்று 30 நாட்களுக்கு மேலாகியும் பல விஷயங்களில் தாமதம் ஏற்படு வதால் மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறதே?

பதில்: முதல்வருக்கு கரோனாதொற்று ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. விரைவாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நிலைமை மாறும். இவ்வாறு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x