Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM

ராஜபாளையம் அருகே கள்ளச் சாராய ஊறல் அழிப்பு :

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை போலீஸார் அழித்தனர்.

ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து, அப்பகுதியில் சேத்தூர் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப் போது, அப்பகுதியைச் சேர்ந்த காசிபாண்டியன் (44) என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது. அங்கிருந்த 200 லிட்டர் கள்ளச் சாராய ஊறலை போலீஸார் அழித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள காசிபாண்டியனையும், அவரது கூட்டாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x