Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

முழு ஊரடங்கை மீறியஓட்டுநர்களுக்கு அபராதம் :

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல், சாலைகளில் வாகன ஓட்டுநர்கள் சுற்றுவதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, கோவை மாநகரில் காவல்துறையினர் கடந்த சில நாட்களாக கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தேவையின்றி சுற்றியதாக நேற்று முன்தினம் 2 ஆயிரம் வாகன ஓட்டுநர்களுக்கும், நேற்று 2,400 வாகன ஓட்டுநர்களுக்கும் மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x