Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

கரோனா கட்டுப்பாட்டு மையங்களில் ஆய்வு :

கோவை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அமைக்கப் பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு மையங்களில் ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

மாநகராட்சி மேற்கு மற்றும் தெற்கு மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு மையங்களில் ஆணையர் ஆய்வு செய்தார். அப்போது, கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொள்ளுதல், அவர்களது விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளைகேட்டறிந்தார். மத்திய மண்டலத் துக்கு உட்பட்ட சி.எம்.சி. காலனி,தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவைப்புதூரில் அமைக்கப் பட்டிருந்த கரோனா மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டார்.

மாநகராட்சி உதவி ஆணையர் தமிழ்செல்வன், மண்டல சுகாதார அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இறைச்சி கடைக்கு ‘சீல்’

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்ட நிலையில், கோவை மசக்காளிபாளையம் சாலையில் உள்ள இறைச்சி கடைகளில் தடையை மீறி இறைச்சி விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. மாநகராட்சி கிழக்கு மண்டல அதிகாரிகள் அப்பகுதிகளில் ஆய்வு செய்து, ஓர் இறைச்சி கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x