Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM
கோவையில் தனியார் அறக்கட்டளை சார்பாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறக்கட்டளையின் நிறுவனர், தலைவர் பிரதீப் கூறும்போது, “மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று எங்கள் அறக்கட்டளை சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 10 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்று ஏற்பட்டு செயற்கை ஆச்சிஜன் தேவை என்ற நிலையில் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு செல்லும் ஏழை மக்களுக்கு இந்த சேவையை வழங்குகிறோம். அவ்வாறு உதவி தேவைப்படுவோர் 9566655936, 9944807938 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT