Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

போக்சோ வழக்கில் தேடப்பட்டவர் தற்கொலை :

கோவை

கோவை செட்டிபாளையம் திருவள்ளுவர் நகர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில், ஆண் சடலம் கிடப்பதாக செட்டிபாளையம் போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீஸார் சென்று சடலத்தை மீட்டனர். விசாரணையில், இறந்தவர் க.க.சாவடி காமராஜபுரத்தைச் சேர்ந்த மணி(60) என்பது தெரியவந்தது.

போலீஸார் கூறும்போது,‘‘கடந்த ஏப்ரல் மாதம் 4 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரில், பேரூர் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ பிரிவின் கீழ் மணி மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இதை அறிந்த மணி தலைமறைவானார். இந்நிலையில், தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x