Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM
வால்பாறை நகர் பகுதியில் அரசு மருத்துவமனையில் வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் உள்ள வசதிகள் மற்றும் நோயாளிகளின் தேவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வால்பாறை அரசு கல்லூரியை கரோனா சிகிச்சை மையமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். இதற்கு தேவையான 100 படுக்கைகளில் 25 படுக்கைகளை எனது சொந்த செலவில் வழங்க உள்ளேன். வால்பாறை அரசு மருத்துவமனைக்கு மின்தடை நேரத்தில் பயன்படுத்த யுபிஎஸ் வசதி செய்து தரவும், நோயாளிகள் காத்திருப்பு அறை அமைக்கவும் ரூ.2 லட்சம் நிதியை சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து வழங்க உள்ளேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT