Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலுள்ள அம்மா உணவகத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர், ஏழை மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், கரோனா தொற்று குறித்தும் சமையலர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி, பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சிவராமன் மற்றும் அம்மா உணவக ஊழியர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT