Published : 17 May 2021 03:15 AM
Last Updated : 17 May 2021 03:15 AM

குடியாத்தம் அருகே சாராய வியாபாரி கைது :

குடியாத்தம் அருகே சாராயம் கடத்தி வந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

குடியாத்தம் அடுத்த செட்டிக்குப்பம் பகுதியில் கிராமிய காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அதேபகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (31) என்பவர் தனது வாகனத்தில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறையினர் செல்வராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x