Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM
பொள்ளாச்சி பகுதியில் ஊரடங்குவிதிகளை மீறுவோரைக் கண்காணிக்க வட்டாட்சியர் அரசகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட 9 குழுவினர், போலீஸாருடன் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குழுவினர், பொள்ளாச்சி நகரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதேபோல பொள்ளாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் அறிவுறுத்தலின் பேரில், போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து, உடுமலை சாலையில் ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தினர்.
நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிப்பேன் என்று அவர்களை உறுதிமொழி ஏற்க வைத்தபின், எச்சரித்து போலீஸார் அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT