Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு :

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க 150 படுக்கை வசதிகளுடன் தயாராகிவரும் புதிய கட்டிடத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரம ணியன் நேற்று ஆய்வு மேற்கொண் டார்.

கரோனா சிகிச்சை குறித்து மருத்துவமனையின் டீன் ரவீந்திரனிடம் கேட்டறிந்தார். ஆக்சிஜன் வசதியுடன், விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ள கட்டிடத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிர மணியம் செய்தியாளர்களிடம் கூறும்போது ‘‘ஆக்சிஜனை சிக்கனமாக பயன்படுத்துவதில், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ மனை முன்னிலையில் உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு இயற்கையாக ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும் முறையும் இங்கு செயல்படுத்தப் படுகிறது. இதுகுறித்து, பிற தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்து செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவமனையின் டீன் ரவீந்திரனிடம் கேட்டுக் கொண்டுள் ளேன்’’ என்றார்.

இதையடுத்து, வரதராஜபுரம் அரசுப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வை யிட்ட அமைச்சர், கையிருப்பில் உள்ள தடுப்பூசியின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

மழையில் நிற்காதவாறு, பள்ளிக் கட்டிடத்தில் நிற்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியனுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கொடிசியா கரோனா சிகிச்சை மையம், மாநகராட்சியில் தனிமைப்படுத்தப் பட்ட பகுதிகள், கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x