Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

சூறைக்காற்றால் மரங்கள் விழுந்து பழங்குடியினர் குடிசைகள் சேதம் :

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் ஆழியாறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஆழியாறு அடுத்துள்ள சின்னார்பதி பழங்குடியின கிராமத்தில் சூறாவளிக் காற்று வீசியதால், குடியிருப்புகள் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததில் ஏழுக்கும் மேற்பட்ட குடிசைகள் சேதமடைந்தன. இவற்றை சீரமைக்க அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆழியாறு அணைப்பகுதியில் உள்ள சின்னார்பதியில் தகரங்கள் வேய்ந்த குடிசைகளில் வசித்து வருகிறோம். கான்கிரீட் வீடுகள் கட்டித்தர பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. பலத்த காற்றுக்கு குடிசைகளின் கூரைகள் பறக்கின்றன. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் யானைகள் நுழையும் சம்பவங்களும் அடிக்கடிநிகழ்கின்றன. சேதமடைந்த குடிசைகளுக்கு நிவாரணம் வழங்குவதோடு, கான்கிரீட் வீடுகள் கட்டித்தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x