Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

வால்பாறையில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க கோரிக்கை :

பொள்ளாச்சி

கரோனா இரண்டாவது அலையில்வால்பாறையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த தனியார் எஸ்டேட் பெண் மருத்துவர், மகப்பேறு சிகிச்சைக்கு சென்று வந்தவர்கள், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் என 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்க நிர்வாகிகளுக்கு, மாநில தோட்டப் பிரிவு தொழிற்சங்கத் தலைவர் வால்பாறை அமீது மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

அம்மனுவில் ‘வால்பாறையில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் கரோனா அச்சத்தில் உள்ளனர். அவர்கள், வால்பாறையிலேயே கரோனா சிகிச்சை பெற வசதியாக தனியார் தோட்டங்களில் இருக்கும் மருத்துவமனையை பயன்படுத்த வேண்டும் அல்லது ஆனைமலை தோட்ட அதிபர்களுக்கு சொந்தமான கட்டிடத்தை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தி தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x