Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM
கோவையில் நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை நேற்று மதியம் வரை கொட்டித் தீர்த்தது. மாவட்ட நிர்வாகத்தினர் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் அன்னூரில் 3 மி.மீ. மேட்டுப்பாளையத்தில் 5, சின்கோனாவில் 65, சின்னக் கல்லாரில் 69, வால்பாறை பி.ஏ.பி.யில் 70, வால்பாறை தாலுகாவில் 63, சோலையாறு பகுதியில் 99, ஆழியாறு பகுதியில் 13.4, சூலூரில் 5, பொள்ளாச்சியில் 17, கோவை தெற்கில் 10, விமான நிலையத்தில் 8.2, பெரியநாயக்கன்பாளையத்தில் 7.2, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 9 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கோவை வேளாண் பல்கலைக் கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் கூறும் போது, ‘‘அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு 16-ம் தேதி(இன்று), 17-ம் தேதி (நாளை) ஆகிய இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை காரணமாக கோவையில் அதிகபட்ச வெப்பநிலை 81 டிகிரி பாரன்ஹீட் முதல் 90 டிகிரிபாரன்ஹீட் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 68 டிகிரி பாரன்ஹீட் முதல் 73 டிகிரி டிகிரி பாரன்ஹீட் வரையும் இருக்கும்.
காற்றின் வேகம் 15 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை இருக்க வாய்ப்புள்ளது. காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT