Published : 16 May 2021 03:17 AM
Last Updated : 16 May 2021 03:17 AM
ஆம்பூர் அருகே வழித்தவறி வந்த மயிலை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடாம்பூரை சேர்ந்த பைரோஸ் அகமத் என்பவரின் வீட்டுக்குள் மயில் ஒன்று நேற்று முன்தினம் நுழைந்தது. அதைக்கண்ட பைரோஸ் அகமது மற்றும் நண்பர்கள் அந்த மயிலை பிடித்து கூண்டுக்குள் பாதுகாப்புடன் வைத்தனர்.
இது குறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் மயிலை மீட்டு ஆம்பூர் அருகேயுள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT