Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

வாழ்வாதாரம் கோரி மாமனார் வீடு முன் - குழந்தைகளுடன் பெண் தர்ணா :

காரைக்குடி அருகே கோட்டையூர் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்த ரவிக்குமாருக்கும், அன்னபூரணி என்பவருக்கும் 2007-ல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு மகள், மகன் உள்ளனர்.

அவர்கள் அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், 2018-ல் உடல்நலக் குறைவால் ரவிக்குமார் இறந்தார்.

இந்நிலையில் குடியிருந்த வாடகை வீட்டை உரிமையாளர் காலி செய்ய வற்புறுத்தினார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு வாழ்வாதாரம் கேட்டு தனது மாமனார் வீட்டு வாசலில் குழந்தைகளுடன் அன்னபூரணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து பள்ளத் தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x