Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

காரைக்குடி அருகே மண்டபத்தில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம் :

காரைக்குடி: காரைக்குடி அருகே புதுவயல் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று சுப நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் தீயை அணைக்க முடியவில்லை.

இதையடுத்து காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், அறந்தாங்கி ஆகிய 4 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், மண்டபத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. இதுகுறித்து சாக்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x