Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

ஆக்சிஜன் பேருந்து, ஆம்புலன்ஸ் இயக்க அரசு தயார்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் :

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளேன். மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து முன்களப் பணியாளர்களுக்காகப் பேருந்துகள் இயக்குவது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

கரனோ ஒழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு போக்குவரத்து துறை சீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும். மாவட்டங்களில் தேவைப்பட்டால் முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் பேசி ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட பேருந்து ஆம்புலன்ஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x