Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் செயல்படும் நேரத்தை மாற்ற வேண்டும் : ஆட்சியரிடம் வியாபாரிகள் கோரிக்கை

மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் செயல்படும் நேரத்தை மாலை 3 மணி முதல் இரவு 12 மணி என மாற்ற வேண்டும் என்று மதுரை பழக் கமிஷன் வணிகர்கள் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இச்சங்கத்தின் தலைவர் சுரேஷ், செயலாளர் காந்தையா, பொருளாளர் முருகேசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

மாட்டுத்தாவணியில் உள்ள பழ மண்டியில் மொத்த பழ வியாபாரம் செய்கிறோம். எங்களது மார்க்கெட்டுக்கு அருகில் காய்கறி மார்க்கெட்டும் இயங்கி வருகிறது. காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இரு மார்க்கெட்டுகளும் இயங்குகின்றன.

மதுரையில் இருந்துதான் 13 மாவட்டங் களுக்குப் பழங்கள் செல்கின்றன. அதனால் காய்கறி, பழங்கள் கொண்டு வரும் விவசாயிகளும், சரக்குகளை இறக்கும் கூலித் தொழிலாளர்களும், வியாபாரிகளும் ஒரே நேரத்தில் கூடுவதால் கரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.

மாலை 3 முதல் இரவு 12 வரை

மேலும் மாங்காய், கொய்யா, பப்பாளி, நெல்லிக்கனி, மாதுளை, சாத்துக்குடி ஆகிய பழங்களை விவசாயிகள் அதிகாலையில் பறித்து மாலை 3 மணிக்குத்தான் மார்க்கெட்டுக்கு வருகின்றனர். எனவே பழ மார்க்கெட் மாலை 3 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x