Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

வில்லி. ஆவின் நிர்வாகத்தை கண்டித்து - பாலை சாலையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம் :

வில்லிபுத்தூரில் பால் கொள் முதல் செய்ய மறுத்த ஆவின் நிர்வாகத்தைக் கண்டித்து உற் பத்தியாளர்கள் பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

வில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் கிராமத்தில் 3 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் செயல்படுகின்றன. இச்சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும் சுமார் 800 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

பின்னர் இந்தப் பால் வில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிலையத்துக்கு வழங்கப்படும். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பாலை ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்ய மறுத்தது.

இதனால் அதிருப்தி அடைந்த பால் உற்பத்தியாளர்கள் ஆவின் வாகனத்தை நேற்று சிறை பிடித் தனர். மேலும், தாங்கள் கொண்டு வந்த பாலை கீழே கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்களுக்கும், ஆவின் நிர்வாகத்தினருக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் பால் உற்பத்தியாளர் களிடம் இருந்து ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் செய்தது. அதைத் தொடர்ந்து ஆவின் வாகனத்தை விடுவித்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x