Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

ஊரடங்கில் முழு ஒத்துழைப்பு தரக் கோரி : வியாபாரிகளுடன் போலீஸார் ஆலோசனை :

பழநி: கரோனா விதிமுறைகள், முழு ஊரடங்கு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி காவல் துறையினருக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கின்போது மளிகை, காய்கறி, ஹோட்டல், டீக்கடை உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழநியில் வியாபாரிகளுடன் போலீஸாரின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பழநி டி.எஸ்.பி. சிவா தலைமை வகித்தார். வியாபாரிகள் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாது பின்பற்ற வேண்டும். விதிகளை மீறும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அரசு அறிவித்துள்ள கடைகளைத் தவிர பிற கடைகளை திறப்பதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும். ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு தந்து கரோனா பரவலைத் தடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி அலுவலர்கள், போலீஸார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x