Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

தோட்டத்தில் புகுந்த மலைப் பாம்பு மீட்பு :

ஆனைமலை அருகே தோட்டத்தில் பிடிபட்ட மலைப் பாம்பு.

பொள்ளாச்சி

தோட்டத்தில் நுழைந்து, வாத்தை விழுங்கிய மலைப் பாம்பை வனத்துறையுடன் இணைந்து தன்னார்வ அமைப்பினர் மீட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே, மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அங்கு ராமச்சந்திரன் நேற்று வேலை செய்துகொண்டிருந்தபோது, அருகில் உள்ள ஆற்றின் கரையில் மலைப் பாம்பு ஒன்று வாத்தை விழுங்கிய பின்னர், புதரில் பதுங்கியதைக் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேற்கு தொடர்ச்சி மலை வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த வினோத்குமார் தலைமையில் சென்ற பாம்பு பிடிக்கும் குழுவினர், புதர்களுக்கு இடையில் பதுங்கி இருந்த சுமார் 9 அடி நீளமுள்ள மலைப் பாம்பை மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x