Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

மறை மாவட்ட முன்னாள் ஆயர் : அந்தோணி ஆனந்தராயர் கரோனாவால் உயிரிழப்பு :

புதுச்சேரி-கடலூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி ஆனந்தராயர், கரோனா தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.

அவரது இறுதிச்சடங்கு, புதுச்சேரியில் நேற்று மாலை நடைபெற்றது. அவரது உடல், புதுச்சேரி ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணிக்கு பேராலயத்தின் அருகேகல்லறையில், புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி பீட்டர்ஆபீர் தலைமையில் அடக்கத் திருப்பலிசெய்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கரோனா விதிமுறைகளை பின்பற்றி, தனிமனித இடைவெளியுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x