Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM
உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே மணிஹட்டி கிராமத்தில் இருந்து உதகைக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் (ஜீப்) தலையாட்டு மந்து பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. மது விலக்கு ஆய்வாளரின் வாகனத்தை ஆயுதப்படை காவலர் மெல்வின் (25) ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. உதகை பி-1 போலீஸார் விசாரணையில், ‘மெல்வின் குடிபோதையில் இருந்துள்ளார் என பரிசோதனையில் தெரியவந்தது’. இதையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் உத்தரவின்பேரில், மெல்வின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT