Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM
தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கிடாரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (35). ஆட்டோ ஓட்டுநரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டி (32) என்பவருடன் நேற்று புளியங்குடி பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கேரளாவில் இருந்து மரத்தடிகளை ஏற்றிச் சென்ற லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மதியழகன் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சங்கரபாண்டி மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். விபத்து குறித்து புளியங்குடி போலீஸார் , விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT