Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

புலம்பெயர் தொழிலாளர் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் :

மதுரை: மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா பரவலால் பல இடங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வதைத் தவிர்க்க, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் குறைகள் குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (94453-98761), தொழிலாளர் துணை ஆய்வர்கள் (98658-18636, 99448-34877) ஆகியமொபைல் போன்களில் தெரிவிக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் குறைகளை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) (94425-24255), தொழிலாளர் துணை ஆய்வர் (98941-60047, தொழிலாளர் உதவி ஆய்வர்(95855-21537) என்ற மொபைல் போன்களில் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x