Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டோர் ஆட்சியரிடம் புகார் :

திருச்சி: திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 3,292 வாக்குச்சாவடிகளில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்காளர்களுக்கு கிருமிநாசினி, கையுறை, முகக்கவசம் ஆகியவற்றை வழங்க சுமார் 6 ஆயிரம் தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், தங்களுக்கு இப்பணிக்கு ரூ.1,000 ஊதியம் தருவதாக கூறிவிட்டு, தற்போது ரூ.250 மட்டுமே தர முடியும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுவதாக திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட சில வாக்குச்சாவடிகளில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் 20 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.

பின்னர், அவர்கள் கூறியது: வாக்குச்சாவடிகளில் கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட ரூ.1,000 ஊதியம் தரப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்ததால், பணியில் ஈடுபட்டோம். ஆனால், தற்போது ரூ.250 மட்டும் தரப்படும் எனக் கூறுவதால் ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்தோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x