Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

வாக்குச்சாவடிகள் முன் குவிந்த கையுறைகள் : போதிய சுகாதாரப் பணியாளரை நியமிக்காத தேர்தல் ஆணையம்

மதுரை மாவட்டத்தில் வாக்கா ளர்கள் வாக்களித்த பிறகு விட்டுச் சென்ற கையுறைகள் தொட்டிகளில் நிரம்பிய பிறகும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

கரோனா மீண்டும் பரவி வரு வதால் முன்னெச்சரிக்கையாக வாக்காளர்களுக்கு கையுறை, முக்கவசம் அணிந்து வாக்க ளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. வாக்காளர்கள் கையுறை, முகக்கவசத்துடன் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்துவிட்டு வெளியே வரும்போது, அங்குள்ள குப்பைத் தொட்டிகளில் கையுறைகளை கழற்றிப்போட ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

இவற்றை உடனுக்குடன் அகற்ற வாக்குச்சாவடிகளில் போதுமான சுகாதாரப் பணி யாளர்களை தேர்தல் ஆணையம் நியமிக்கவில்லை. அங்கு பணியில் இருந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்வது, வாக்கா ளர்களுக்கு முகக்கவசம், கையுறை வழங்கும் பணிகளை ஒப்படைத்தனர்.

இதனால் அவர்களால் குப் பைத் தொட்டிகளில் குவிந்த கையுறை, முகக்கவசங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் குப்பைத் தொட்டியைச் சுற்றிலும் கையுறை, முகக் கவசங்கள் கிடந்தன.

கரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காகவே கையுறை, முகக்கவசத்தை தேர்தல் ஆணை யம் வழங்கியது. ஆனால், வாக் காளர்கள் தாங்கள் அணிந்த கையுறை, முகக்கவசங்களை வாக்குச்சாவடிகள் முன் வீசிச் சென்றதால் அவர்களில் யாருக் காவது தொற்று ஏற்பட்டு அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் முகக்கவசம், கையுறை வழங்கிய நோக்கம் நிறைவேறாமல் தொற்று பரவ ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x