Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM
மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மெட்ரோ ரயில்களில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 28 லட்சத்து 17 ஆயிரத்து 510 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், க்யுஆர் குறியீடு மூலம் 62 ஆயிரத்து 586 பேர் பயணம் செய்துள்ளனர். பயண அட்டை பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 13 லட்சத்து 17 ஆயிரத்து 093 பேர் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக கடந்த 8-ம் தேதி மட்டும் 1 லட்சத்து ஆயிரத்து 163 பேர் பயணம் செய்துள்ளனர். 20 சதவீத கட்டண சலுகையை பெற மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி பயணம் செய்ய பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT