Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

சிஐடியு தலைவர் சவுந்தரராசன் இன்றுமுதல் பிரச்சாரம் :

சென்னை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அ.சவுந்தரராசன் இன்றுமுதல் 28-ம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகச் செயலாளர் வெ.ராஜசேகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், சிஐடியு மாநிலத் தலைவரும், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான அ.சவுந்தரராசன், இன்று மதுரையிலும், 24-ல் பல்லாவரம், தாம்பரம், 25-ல் பெரும்புதூர், 26-ல் கந்தர்வகோட்டை, 27-ல் பூந்தமல்லி, அம்பத்தூர் (பொதுக்கூட்டம்), 28-ல் அரூரிலும் பிரச்சாரம் செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x