Published : 10 Mar 2021 03:12 AM
Last Updated : 10 Mar 2021 03:12 AM
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய சோதனை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த முடிவுகளின்படி தேசிய அளவில் 6 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களில் 4 பேர் ஆலன் கரீர் மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என அக்கல்வி மையத்தின் இயக்குநர் பிரஜேஷ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
தேசிய சோதனை நிறுவனம் வெளியிட்டுள்ள 41 மாநில டாப்பர்கள் பட்டியலில் 14 மாநில டாப்பர்கள் ஆலன் கரீர் மையத்தில் பயின்றவர்கள். அவர்களில் 10 பேர் வகுப்பிலும், 4 பேர் தொலைதூரக் கல்வி திட்டத்திலும் கற்றவர்கள்.
ஆலன் கரீர் மையத்தில் பயின்ற சித்தாந்த் முகர்ஜி மகாராஷ்டிரா மாநில டாப்பராகவும், ஹரியாணாவில் சித்தார்த் குப்தா, மேகாலயாவில் சோவிக் டி, ஜார்க்கண்ட் யாஷ் குமார், மத்திய பிரதேசம் அந்த்ரிக்ஷா குப்தா, கர்நாடகா உத்தவ் வர்மா, அசாம் சவும்யதீப் பால், ராஜஸ்தான் சாகத், இந்தியாவுக்கு வெளியிலான பிரிவில் நிஹித் அகர்வால், சத்தீஸ்கர் அயான் கோஷ், பஞ்சாப் தனிஷ் ஜான்ஜி, தாத்ரா நாகர் ஹவேலி ஷ்ரியா திவாரி, சண்டீகர் குர்ம்ரித், குஜராத் அனந்த் கிருஷ்ண கிடாம்பி ஆகியோர் அந்தந்த மாநில டாப்பர்களாக உள்ளனர்.
அது மட்டுமல்லாமல் ஏராளமான ஆலன் கரீர் மாணவர்கள் 99 சதவீதத்துக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT