Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

நாமக்கல் அரசு கல்லூரியில் ஆய்வியலும்- நூலகமும் கருத்தரங்கம்

நாமக்கல்: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் உள் தர உறுதி மையம் மற்றும் நூலகம் சார்பில் 'ஆய்வியலும் நூலகமும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பெ.முருகன் தலைமை வகித்தார். கல்லூரி உள் தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ம.சந்திரசேகரன் வரவேற்றார்.

கல்லூரி நூலகர் பொ.ராஜ்குமார் பேசும்போது, ஆய்வு என்றால் என்ன, ஆய்வுக்குரிய விஷயத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, ஆய்வை எப்படி மேல் எடுத்துச் செல்வது, தரவுகளைத் திரட்டுவது, அவற்றின் அடிப்படையில் ஆய்வை வடிவமைப்பது ஆகியவை குறித்து விளக்கிக் கூறினார். மேலும், இவற்றுக்கு நூலகம் எந்தெந்த வகையில் எல்லாம் உதவுகிறது என்பது தொடர்பாக பேசினார்.

கருத்தரங்கில் வணிகவியல் உதவிப் பேராசிரியர் செந்தில்குமார் உள்பட கல்லூரி மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x