Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

துரோகிகள் யார் என்பதை மக்கள் நன்கறிவார்கள் பிரதமர் முன்னிலையில் நாராயணசாமி மீது நமச்சிவாயம் ஆவேசம்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் நாராயணசாமி எங்கள் மீது சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார். எங்களை பார்த்து கேட்கிறார், 'நீங்கள் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு ஓடிவிட்டீர்கள் என்று'. யார் துரோகம் செய்தது என்பதை புதுச்சேரி மக்கள் நன்கு அறிவார்கள்.

2016-ம் ஆண்டு தேர்தலில் எனக்கு துரோகம் செய்தீர்கள். உங்களுக்காக தொகுதியை விட்டுக் கொடுத்து தியாகம்செய்த ஜான்குமாருக்கு துரோகம் செய்தீர்கள். உங்களுக்காக கட்சியில் இரவும்,பகலும் பாடு பட்ட காங்கிரஸாருக்கும்,உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும்துரோகம் செய்தீர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் போற்றிவணங்கும் கட்சி தலைமைக்கும் துரோகம் செய்துள்ளீர்கள்.

புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக இந்த முடிவைஎடுத்துள்ளோம். நான்கரை ஆண்டுகாலம்புதுச்சேரி மாநில மக்களுக்கும், இளைஞர்களுக்கும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளீர்களா?

நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய நாராயணசாமி, 'நான் மோடியையும் பார்ப்பேன், அவரது தாத்தாவையும் பார்ப்பேன்' என்று பேசியுள்ளார். நான் நாராயணசாமிக்கு பணிவுடன் சொல்வது, கிரண்பேடியையே உங்களால் சமாளிக்க முடியவில்லை.

இந்தியா முழுவதும் ஆட்சி நடத்து கின்ற தலைவரை எப்படி சமாளிப்பீர்கள்? உங்களுடைய பூச்சாண்டிக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x