Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM
கோவை: தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் மாநிலம் முழுவதும் ‘ஈஷா விவசாய இயக்கம்’ சார்பில் பல்வேறு வகையான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தென்னையில் பல பயிர் சாகுபடி செய்து நன்கு லாபம் ஈட்டி வரும் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களைப் பார்வையிடுவதற்காக 2 நாள் இயற்கை விவசாய சுற்றுலாவை, கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை, ஈரோடு, சேலம், மதுரை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 55 விவசாயிகள் பங்கேற்றனர். உடுமலைப்பேட்டை, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ஈஷாவின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக விவசாயம் செய்து வரும் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தென்னை மரங்களுக்கு நடுவே ஐந்தடுக்கு சாகுபடி முறையில் தோட்டத்தை உருவாக்குவது, ஆடு, மாடு, கோழி, மீன் மற்றும் தேனீ வளர்ப்புடன் ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றும் வழிமுறைகள், பண்ணைக் குட்டை மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை கட்டமைத்தல், நீர் மேலாண்மை, விளை பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை நேரடியாக விவசாயிகள் தெரிந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT