Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

சிவகிரியில் 65 மி.மீ. மழை

தென்காசி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த ஓரிரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தென்காசி மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 65 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணையில் 25 மி.மீ. ஆய்க்குடியில் 16.8 மி.மீ. கருப்பாநதி அணையில் 16 மி.மீ. ராமநதி அணையில் 7 மி.மீ. தென்காசியில் 4.8 மி.மீ., செங்கோட்டையில் 3 மி.மீ. குண்டாறு அணையில் 2 மி.மீ. மழை பதிவானது. இதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்தில் 7 மி.மீ., சேர்வலாறில் 2 மி.மீ. மழை பதிவானது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 121.45 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 129.56 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 109.30 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 46.20 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 13.19 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 18 அடியாகவும் இருந்தது. தென்காசி மாவட்டத்தில் கடனா நதி அணை நீர்மட்டம் 78 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 64.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 59.06 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 35 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 71.50 அடியாகவும் இருந்தது. மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் பிரதான அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால், பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. திடீர் மழையால் நெல் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x