Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் உழவர் சந்தையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்டச் செயலாளர் முஸ்தபா தலைமை வகித்தார். டவுன் பகுதி தலைவர் அப்துல்லா காஜா வரவேற்று பேசினார். மாநகர் மாவட்ட தலைவர் கனி தொடக்கவுரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத், மாநிலச் செயலாளர் நவவி, இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி உஸ்மானி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்கள், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ரத்ததானம் வழங்கியவர்கள், மருத்துவ சேவை செய்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கூட்டத்தில், `பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிப்பது. மோசமான நிலையில் உள்ள திருநெல்வேலி சந்திப்பு -டவுன் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும். தாமிரபரணி நதியை பாதுகாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT