Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

பெண்ணாடத்தில் மழையால் 5,000 நெல் மூட்டைகள் சேதம்

பெண்ணாடம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பிளாஸ்டிக் விரிப்புகளால் நெல் மூட்டைகளை மூடி வைத்திருக்கும் விவசாயிகள்.

விருத்தாசலம்

விருத்தாசலத்தை அடுத்த பெண்ணாடத்தில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழானது.

சம்பா சாகுபடி முடிந்து அறு வடை செய்த நெல்லை கொள் முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 129 இடங்களில் நேரடி கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் விருத்தா சலத்தை அடுத்த பெண்ணாடத்தில் இருவாரங்களுக்கு முன் திறந்த வெளி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக மூட்டைக் கட்டி விற்பனை நிலைய வளாகத்தில் வைத்திருந்தனர்.

நேற்று அதிகாலை பெய்த திடீர் மழையால் நெல் மூட்டை கள் நனைந்து வீணானது. நெல்மூட்டைகள் மேலும் வீணாகா மலிருக்க விவசாயிகள் பிளாஸ்டிக் விரிப்புகளைக் கொண்டு மூடினர்.

ஆனாலும், பெண்ணாடம், மாளிகைக்கோட்டம், திருமலை அகரம், தாழநல்லூர், நந்தப்பாடி, வெண்கரும்பூர், கிளிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் விளைந்த சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது. தற்போது கொள்முதல் நிலையம் மூடப்பட்டுள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருப்பதாகவும் வெண்கரும்பூரைச் சேர்ந்த விவசாயி முருகன் கவலை தெரி வித்தார்.

தற்போது உளுந்து விதைத் துள்ளோம். மழை இதோடு நின்றுவிட்டால் உளுந்து பயிர்தரமான விளைச்சலைக் கொடுக் கும்.

மழை தொடருமேயானால் உளுந்தும் பாழாகிவிடும் என்றும் கவலை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x