Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM

சாராயம் விற்ற 2 பெண்கள் கைது

அணைக்கட்டு அருகே சாராய வழக்கில் 2 பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

அணைக்கட்டு அடுத்த கொல்லக்கொட்டாய் மற்றும் கொட்டாவூர் பகுதிகளில் சாராய விற்பனை அதிகரித்து வருவதாக வந்த புகாரை தொடர்ந்து, வேப்பங்குப்பம் காவல் துறையினர் அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொட்டாவூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரோசி (55) என்பவர் தனது வீட்டின் அருகே பாக்கெட் சாராயம் விற்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ரோசியை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல, கொல்லக்கொட்டாய் பகுதியில் நடத்திய சோதனையில், அதேபகுதியைச் சேர்ந்த குப்பம்மாள் (42) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் குப்பம்மாளை கைது செய்து, அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x