Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM

தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களை சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. உடல் திடகாத்திரம் மற்றும் விருப்பமுள்ள, 65 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள், தங்களது அடையாள அட்டை மற்றும் படைப் பணி விவரச் சான்றுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி, விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இப்பணிக்கு, அரசு விதிமுறைகளின்படி ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x