Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM
கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நிரந்தர உண்டியல்கள் மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய தொகை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படும். இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதில், நிரந்தர உண்டியல்களில், 39 லட்சத்து, 31 ஆயிரத்து, 25 ரூபாய் இருந்தது. தட்டு காணிக்கை உண்டியலில், 13 லட்சத்து, 42 ஆயிரத்து, 385 ரூபாய் இருந்தது. மேலும், 262 கிராம் தங்கம், 810.5 கிராம் வெள்ளி, பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. நிகழ்வில் மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி, ஈச்சனாரி விநாயகர் கோயில் உதவி ஆணையர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT