Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM
கோவை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலர் மோகன் தலைமை வகித்தார். நிர்வாகி சண்முகம் வரவேற்றார்.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, "அரசின் முரண்பாடான கொள்கை முடிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள 246 சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி மேம்பாடு வழங்க வேண்டும். 750 சுகாதார ஆய்வாளர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
கரோனா பரவலையும் கருத்தில் கொள்ளாமல் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 2,715 சுகாதார ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT