Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

பெத்திக்குட்டை வனப் பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை

கோவை மாவட்டம் பெத்திக்குட்டை வனப் பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை.

மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் பெத்திக் குட்டை வனப் பகுதியில் காட்டு யானை இறந்து கிடந்தது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெத்திக்குட்டை வனச் சரகத் துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (ஜன. 28) வனத் துறையினர் ரோந்து சென்ற போது, 25 வயது மதிக்கத்தக்க பெண் யானைஇறந்து கிடந்தது தெரியவந்தது. சினையாக இருந்த யானை, குட்டிஈன முடியாமல் உயிரிழந்திருக் கலாம் என்று வன விலங்கு மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார். இருப்பினும் உடற்கூறாய்வுக்குப் பின்னரே யானை இறந்ததற்கான காரணத்தைக் கூற முடியும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x